பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப்பகுதியில் சில வாயுக்கள்காணப்படுகிறது

பெண்களை அம்மனின் அம்சமாககூறுவது ஏன்..?

கோயிலில் உள்ள அம்மனுக்குபட்டுப்புடவை கட்டி மலர் மாலைசூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி,வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகியஅணிகலன்கள் அணிவித்தாலேஅலங்காரம் முழுமையடையும்.

பெண்களை அம்மனின் அம்சமாககூறுகின்றனர். எனவே தான் பெண்கள்அணியும் கீழ்கண்டஅணிகலன்களுக்கும் சில காரணங்கள்கூறப்படுகிறது.

1.தாலி – தாயாகி, தாலாட்டுப்பாடகணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு – எதையும் காதோடு போட்டுக்கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி – மூக்கு தான் முதலில்சமையலை அறியும் உத்தி என்பதைஉணர்த்துகிறது.
4. வளையல் – கணவன் உன்னைவளைய, வளைய வர வேண்டும்,என்பதற்காக,
5. ஒட்டியாணம் – கணவன், மனைவிஇருவரும் ஈருடல் ஓருயிராய்ஒட்டியானோம் என்பதற்காக !
6. மோதிரம் – எதிலும் உன் கைத்திறன்காண்பிக்க.

இவை தவிர நகைகள் உடல்ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகஉருவானவை, அதிகமான ஆபரணங்கள்தங்கத்தில் அணியப்படுவதன் காரணம்வெப்பமான நாடுகளில் வெப்பத்தைகுறைத்து, உடலை குளிர்ச்சியாகவைத்திருக்க தங்கம் ஏற்றது.

அத்துடன் தங்கம் எப்பொழுதும் எமதுஉடலை தொட்டுக்கொண்டிருப்பதால்நாளடைவில் உடலின் அழகைஅதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

கொலுசு: பொதுவாக எல்லாநகைகளையும் தங்கத்தில் அணியும்நாம், காலில் அணியும் நகைகளைவெள்ளியில் தான் அணிகிறோம்

இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமிஇருப்பதால் காலில் அணியும் நகைகள்தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன்வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றிகுளிர்ச்சியாக்கி சருமத்தைஆரோக்கியமாக்கும்.

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினைதொட்டுகொண்டிருப்பதால் குதிகால்பின் நரம்பின் வழியாக மூளைக்குசெல்லும் உணர்சிகளைக் குறைத்துகட்டுப்படுத்துகிறது.

மெட்டி: மெட்டி என்பது திருமணமானபெண்கள் மட்டும் அணியும் ஆபரணம்.பெண்களது கருப்பைக்கான முக்கியநரம்புகள் கால் விரல்களிலேயேஇருக்கிறது.

வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்தசக்தி கால் நரம்புகளில் ஊடுருவிநோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது.மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான்அணிய வேண்டும்.

மோதிரம்: விரல்களில் அணியப்படும்மோதிரம் பதற்றத்தை குறைக்கவும்,இனிமையான பேச்சு திறன், அழகானகுரல் வளத்திற்கு உதவுகிறது.

அதிலும் மோதிர விரலில்அணியப்படுவதன் முக்கிய காரணம்ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளைஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும்உதவுகிறது.

விரல்களில் மோதிரம் அணிவதால்இதயக் கோளாறுகள் மற்றும் வயிறுகோளாறுகள் நீங்கவும் உதவுகிறது.சுண்டு விரலில் மோதிரம்அணியக்கூடாது.

மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பதுகாலம் காலமாக நடைமுறையில்இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூடநவீன உலகில் முக்கியத்துவம்பெறுகிறது.

பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப்பகுதியில் சில வாயுக்கள்காணப்படுகிறது. இந்த வாயுக்களைஉடலில் இருந்து அகற்றுவதற்கு தான்,மூக்கில் துளை இடும் பழக்கம்உருவானது.

இதனால் பெண்களுக்கு மூக்குதொடர்பான பிரச்சனைகள்நிவர்த்தியாகும். காற்றைவெளியேற்றுவதில் ஆண்களுக்குவலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும்பலமான வலுவான பகுதிகளாகும்.

வலது புறமாக சுவாசம் செல்லும் போதுதான் உடலுக்கும் மனதுக்கும் பலன்கிடைக்கும். முறையான சுவாசபரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.

சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம்அணிய வேண்டும். இடப்புறம்அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒருநிலைப்படுத்தபடுகிறது.

காதணி: தோடு என்பது காதில் அணியும்ஆபரணம். பெண்கள்; அனைவரும்அணியும் இந்த ஆபரணத்தைஆண்களும் அணிவார்கள்.

காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒருமுக்கிய சடங்காகவேகொண்டாடப்படுகிறது. காதில்துவாரமிட்டு காதணி அணிவதன்முக்கிய நோக்கம் கண் பார்வையைவலுப்படுத்தவே ஆகும்.

Leave a comment